ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 553

கேள்வி: ஒரு உயிர் உடலை விட்டபின் அந்த ஆன்மாவிற்கு இறைவன் முக்தி அளிக்க முடிவு செய்துவிட்டால் அந்த ஆன்மா இறைவனிடம் ஐக்கியமாக எடுத்துக் கொள்ளும் கால அளவு என்ன?

காலம் நேரம் இடம் பொருள் எடை எல்லாம் இந்த உலகத்தை பொறுத்தமட்டில் தானப்பா. இந்த உலகத்தை தாண்டி பல்வேறு உலகம் சென்று விட்டால் இப்பொழுது இருக்கின்ற எந்த கணிதமும் வேலை செய்யாது. புரிவதற்காக இந்த இதை வேறுவிதமாக கூறினால் இங்கு ஒரு மனிதன் இப்பொழுது உள்ள 50 கிலோ எடை இருப்பதாக கொள்வோம். அவன் குரு கிரகத்திற்கு சென்று விட்டால் இதை போல் மூன்று மடங்கு ஆகிவிடுவான். இப்பொழுது அவனின் உண்மையான எடை என்ன என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? எனவே காலம் இல்லை என்பது தான் இறைவனோடு இணைகின்ற அந்த தருணம் அப்பா

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.