ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 680

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

கந்த சஷ்டி கவசம் கந்த குரு கவசம் என்று எந்த கவசமாக இருந்தாலும் அதை ஒரு மனிதன் தன் சொந்த கவசம் என்று (தனக்காக என்று) எண்ணி பாராயணம் செய்யாமல் பிறர் கஷ்டம் நீங்க பாராயணம் செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இது போன்ற பாசுரங்களை இறை வழிபாட்டு பாடல்களை பாடியவர்கள் யாரும் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்று பாடவில்லை. அதனால் தான் ஆதிசங்கரர் பிட்சை எடுத்தார். தனக்காக அன்னை மகாலட்சுமியை அவர் வேண்டவில்லை. பிறர் வறுமை நீங்கத்தான் வேண்டினார். எனவே இது போன்ற விஷயங்களை பிறர் துன்பம் நீங்க ஒரு மனிதன் பயன்படுத்தினால் பரிதமாகும். அதிலேயே பிறர் நலத்தை பார்ப்பதால் அவன் பாவங்கள் குறைந்து அவனுக்கும் இறையருளால் நலம் கிட்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.