ஊர்த்துவ தாண்டவத்தில் சிவபெருமான்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கம்பத்தடி மண்டபத்தின் கிழக்குப் பகுதியின் தெற்குப் பகுதியில் ஊர்த்துவ தாண்டவரின் சிற்பம் உள்ளது. சிவனுக்கும் காளிக்கும் இடையே யார் சிறந்த நடனக் கலைஞர் என்ற போட்டியின் போது சிவன் தனது வலது காலை நேராகத் தன் தலையின் மட்டத்திற்கு தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். சிவபெருமானின் இடது காலுக்கு அருகில் அமர்ந்து மத்தளம் இசைக்கும் நந்திதேவர் சிவாம்சத்துடன் கூடியவர் என்பதை விளக்க 2 கைகள் தலைக்கு மேலே உயர்த்தி இறைவனை வணங்கிய நிலையில் அஞ்சலி ஹஸ்தமாகவும் 2 மத்தளம் வாசிக்கும் நிலையிலும் மொத்தம் 4 கரங்களுடன் உள்ளது. வலதுபக்கம் உடன் காரைக்கால் அம்மையார் உள்ளார். இடம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மதுரை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.