அம்மை காண ஆனந்த நடனம் புரியும் ஆடல்வல்லான்

ஆடல்வல்லான் சிவகாமி காண உயிர்களுக்கு அருள் வழங்க ஆனந்த தாண்டவம் புரிந்ததை தத்ரூபமாக செதுக்கியுள்ளனர். மேற்புறத்தில் சுடர்களுடன் திருவாச்சி. ஜடாமகுடத்துடன் விரிசடையில் வலதுபுறம் வானிலிருந்து இறங்கும் வணங்கிய நிலையில் கங்கை இடப்புறத்தில் பிறை நிலவு. உடுக்கையும் தீயும் வலது இடது பின்கரங்களில் ஏந்தி அபய கரத்துடன் தூக்கிய திருவடியைப் பற்றிக்கொள் என்று காட்டி ஆணவமாகிய முயலகன் மேல் நின்று அகிலமெல்லாம் இயங்க ஆடிக் கொண்டிருக்கிறார். புலித்தோல் ஆடை ஆடும் வேகத்தில் முடிந்தும் நீண்டும் பறந்து கொண்டிருக்கின்றன. ஓரத்தில் கரை குஞ்சம் போன்ற அமைப்பு. வலத்தோளின் பின்புறம் படமெடுக்கும் நாகம், தோள் மாலை, கழுத்தணி, கையணி, இடையணி, காலணியுடன் அம்மையும் அவள் பங்கிற்குப் பேரழகுடன் நிற்கிறாள். குடவரைகளில் அம்மை காண ஆனந்த நடனம் புரியும் நடராஜரின் சிற்பம். இடம்: மூவரைவென்றான் மொட்டமலை பல்லவா் கால குடைவரை கோவில் விருதுநகா் மாவட்டம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.