இந்தியாவின் தெற்கு கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞ்சத்தில் குகைக் கோயில் உள்ளது. கிபி 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இக்கோயில். குடைவரை கோவில் வீணாதர தட்சிணாமூர்த்தியின் சன்னதியை கொண்டுள்ளது. குகையின் வெளிப்புறச் சுவர் சிவனின் முடிக்கப்படாத சிற்பம் உள்ளது. தென்னிந்தியாவின் மிகச்சிறிய பாறை குடைவரை ஆலயமாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில் இருபுறமும் சிவன் மற்றும் பார்வதியின் முடிக்கப்படாத சிற்பங்களும் உள்ளன. கேரளாவின் ஆரம்பகால குடைவரை குகைக் கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த குடைவரை குகைக் கோயில் 1965 முதல் இந்திய தொல்பொருள் ஆய்வின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும்.
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2024/11/1-3.jpg?resize=650%2C944&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2024/11/4-2.jpg?resize=650%2C433&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2024/11/424720640_7640879369276271_7702274373396609964_n.jpg?resize=650%2C434&ssl=1)