ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 490

கேள்வி: நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் பற்றி கூறுங்கள்:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் இறைவனை தாங்குகின்ற வாகனமாக தர்மமே நந்தியாக அவதாரம் செய்திருக்கிறது. எனவே அதுபோல் நந்தியின் திருக்கல்யாணம் என்பது மனிதர்களின் திருமண தோஷத்தை நீக்கக் கூடிய வகையிலே நடத்தப்படுவதாகும். இதற்குள் இன்னும் பல தத்துவார்த்த விளக்கங்கள் இருக்கின்றன. அங்கே தர்மம் வாழத் துவங்குகிறது. தர்மம் இறைவனை தாங்கி நிற்கிறது. இறைவனை தாங்குவது தர்மம்தான். எனவே அந்த இடத்திலே அதை நந்தியாக பாராமல் தர்மமாக பார்த்துவிட்டால் அந்த தர்மத்தை கடைபிடித்து எல்லோரும் வாழவேண்டும் என்பதின் உட்பொருள்தான் நந்தியெம்பெருமானின் திருமணம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.