ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 497

கேள்வி: ஒன்றரை வயது குழந்தைக்கு ஆறு மாத குழந்தைக்கு உள்ள வளர்ச்சிதான் இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் கரு உருவாகும் பொழுதே சதைப் பிண்டம் எப்படி உருவாக வேண்டும்? என்று அதற்குள் நுழைய உள்ள ஆன்மாவின் கர்ம வினைக்கேற்ப தீர்மானிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல்தான் உடல் உருவாக்கப்படுகிறது. பிறகு அந்த உடலில் மாற்றங்களும் சராசரிக்கு மாறுபட்ட நிலையும் ஒரு ஆரோக்ய நிலையும் ஆரோக்ய குறைபாடும் ஏற்பட்டு விடுகிறது. எனவே மீண்டும் கர்ம வினைக்குதான் வர வேண்டியிருக்கிறது. வழக்கம் போல் இறை வழிபாடு வழக்கம் போல் தர்மம் வழக்கம் போல் பிரார்த்தனை இது போன்ற குறைபாடுகளைக் குறைக்க உதவும். ஆனால் நீக்க உதவாது. ஏனென்றால் அப்படியொரு நிலையில்தான் அந்த ஆத்மா பிறவி எடுக்க வேண்டும் என்ற விதி இருக்கும் பட்சத்தில் அப்படியொரு பிறவிதான் அமையுமப்பா.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.