ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 207

கேள்வி: கெளபன தீர்த்தத்தைப் பற்றியும் கெளபனத்தைப் பற்றியும் சொல்லி அருளுங்கள்:

நிர்வாண தீட்சை வேண்டும். இதுபோல பரிபூரண ஞான நிலை பல நூறு பல ஆயிரம் பல கோடி பிறவிகளுக்கு பிறகுதான் அந்த பாக்கியம் இருக்கும் என்கிற ஆத்மாக்கள் ஏதாவது ஒரு சிறு துளி புண்ணியத்தின் பலனாக ஏதாவது ஒரு குருவை நாடி தீட்டை பெற்றாலோ அல்லது ஜீவ அருள் ஓலை (ஜீவநாடி) மூலமாகவோ வேறு ஏதாவது வழியிலே இதுபோல் மகான்களை சந்தித்து ஆசி பெறுவதும் அது போன்ற வழியில் செல்வதற்குண்டான அந்த ஆசியை தருவதும்தான் நீ கூறிய அந்த கெளபீனத்தின் மகிமையாகும். யாருக்கு அது கிடைத்தாலும் அதன் மகிமையை புரிந்து உள்ளன்போடு எவன் போற்றுகிறானோ அவனுக்கு ஞான வழியின் கதவுகள் மிக எளிதாக திறக்கும்.

கேள்வி: அன்னசேவையையும் அபிஷேகத்தையும் முருகப்பெருமான் ஏற்றுக் கொண்டாரா ஐயனே?

இறைவன் அருளால் முருகப்பெருமான் அருளாசி தந்துதான் போகன் (போகர் சித்தர்) வந்தான் என்று நாங்கள் மீண்டும் கூறுகிறோம். தொடர்ந்து இது போன்ற பல்வேறு பூஜைகளை செய்வதோடு தமக்குள் இருக்கின்ற அபிப்ராய பேதங்களையெல்லாம் மறந்து கருத்து வேறுபாடுகளையெல்லாம் மறந்து தகாத மனிதர்கள் தகாத வார்த்தைகளைக் கூறும் பொழுது அதைக் கேட்கின்ற மனிதன் சினம் கொண்டு எதனையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் செய்து விடாமல் இன்னும் இன்னும் பல்வேறு உள்ளங்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையோடு ஒருவர் கருத்தை ஒருவர் தெளிவாக புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். இங்கே இறை ஆணையும் சித்தர்களின் வழி காட்டுதலும் முக்கியம். அந்த செயல் நல்லவிதமாக நடக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு தொடர்ந்து அனைவரும் ஒன்றுபட்டு செய்ய நல்லாசி கூறி மீண்டும் தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் புண்ணியகாரியங்களும் அனைவருமே செய்ய மீண்டும் நல்லாசிகள் ஆசிகள் என்று கூறி சுபம் என்று பூர்த்தி செய்கிறோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.