ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 495

கேள்வி: திருப்பனந்தாள் அருகில் திருலோக்கி என்ற ஸ்தலத்திலே வேறு எங்கும் இல்லாதபடி ரிஷபத்தின் மேல் ஸ்வாமியும் அம்பாளும் இருக்க வணங்கிய கோலத்தில் குருபகவானும் இருக்கிறார்கள்:

இறைவன் அருளால் இன்னவன் திருலோக்கி பற்றி கூறுகிறான். அங்கே ஒன்றை விட்டுவிட்டானே? அதுதானே மனிதர்களுக்கு மிகவும் முக்கியம். திருலோக்கி என்பது இல்லற சுகம் இல்லை என்று ஏங்கக்கூடிய மனிதர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலங்களில் ஒன்று. அதுபோக இன்னவன் கூறியபடி அனைத்து வளங்களும் நலங்களும் தரக்கூடிய ஸ்தலம். ரதியும் மன்மதனும் அருள் புரியக்கூடிய இடம். அங்கு ரதி மன்மதனின் அருளை பெறக்கூடிய பிரார்த்தனைகளை தாராளமாக செய்யலாம். மனிதர்களுக்கு எல்லாம் வேண்டியிருக்கிறதே? இதுபோல் அரூபமாக அங்கு இன்றும் பல ரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இக்கோவிலைப்பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.