ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 486

கேள்வி: வைராக்யம் மற்றும் விடாமுயற்சியுடன் இருக்க வழிமுறை:

இறைவன் அருளாலே தொடர்ந்து இதுபோல் நல்விதமாய் மனிதன் போராட கற்றுக் கொள்ள வேண்டும். அயர்ந்து விடக்கூடாது. இறைவனை வணங்குவதோடு சத்தியத்தை பின்பற்றுவதோடு தர்ம காரியங்களை செய்வதோடு தொடர்ந்து எத்தனை துன்பங்கள் வந்தாலும் துவண்டு விடாமல் போராடும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் தன்னைத்தானே சுய ஆய்வு செய்ய வேண்டும். இன்று எத்தனை செயல்கள் செய்தோம்? அதில் எத்தனை நற்செயல்கள்? எத்தனை அவச்செயல்கள்? இனிமேல் இந்த அவச்செயல்களை செய்யக் கூடாது என்றெல்லாம் சுய ஆய்வு செய்து தன்னைத்தான் நீதிபதியாக குற்றவாளியாக சாட்சியாக அங்கே அவன் தீர்ப்பு வழங்க வேண்டும். இப்படி சுய ஆய்வு செய்து கொண்டே ஒரு மனிதன் வாழ்ந்தால் வைராக்யம் வளர்ந்து விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.