ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 644

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

எத்தனை ஆசிகள் யாங்கள் வழங்கினாலும் தனத்தையே குறியாகக் கொண்டு வாழ்பவரை யாங்கள் கரை சேர்ப்பதில்லை. சிறப்பான சிந்தை உயர்ந்த குணம் எவருக்கும் உதவுதல் எதிரிக்கும் உதவுதல் என்ற மனம். மனத்தால் அணுவளவும் சூது இல்லாமல் இருப்பது. வாரி வாரி வழங்குவது போன்ற குணங்கள் எம்மை அருகில் சேர்க்குமப்பா. மனம் ஒன்று நினைக்க வாக்கு ஒன்று சொல்ல செயல் ஒன்று செய்ய வரும் மாந்தர்களை நாங்கள் நன்றாக அறிவோம். சரணாகதி அடைந்தால் தான் தேற முடியும். எம்மை பணிந்தாலும் பணியா விட்டாலும் இறையை பணிய வேண்டும். எம்மை ஏற்றாலும் ஏற்கா விட்டாலும் இறையை ஏற்க வேண்டும். வெறும் வழிபாட்டை மட்டுமல்ல சத்தியத்தை ஏற்க வேண்டும். ஏற்பதென்றால் மந்திர உருப்போடுவது மட்டுமல்ல. மனம் குன்றா தானம் அளிப்பதையும் ஏற்க வேண்டும். எம்மிடம் கணிதம் பார்த்தால் இறையிடம் கணிதம் பார்த்தால் யாங்களும் கணிதம் பார்க்க வேண்டி வரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.