ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 631

எத்தனை தான் ஆரோக்கியமாக சூழலில் வாழ்ந்தாலும் ஒருவனுக்கு பிணி வர வேண்டும் என்ற விதி நிலை வந்து விட்டால் பிணி வந்தே தீருமப்பா. இறைவனை தொடு. உனக்கு சிகிச்சையே தேவையில்லையப்பா. எத்தனையோ வகையான சிகிச்சை முறைகள் காலகாலம் சித்தர்களால் மனிதர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது. மூலிகைகளை ஏற்பது. எந்த உணவையும் ஏற்காமல் விரதத்தோடு இருந்து பிணைகளை நீக்குவது. வெறும் நீரை மட்டும் பருகி சில பிணிகளை நீக்குவது. உடலிலே சில இடங்களில் சில குறிப்பிட்ட அழுத்தங்களை தந்து நோய்களை நீக்குவது. எந்த வகையான அழுத்தங்களையும் தராமல் குறிப்பிட்ட இடத்தை உற்று நோக்கி திருஷ்டி சிகிச்சை என்ற ஒன்று இருக்கிறது. இப்படி எல்லாம் பல்வேறு சிகிச்சை முறைகள் இருப்பது உண்மை. ஆனால் தெள்ளத் தெளிவாக கற்று உணர்ந்த மனிதர்கள் இன்று குறைவு. எப்பொழுதுமே அரைகுறை அறிவு ஆபத்தை தரும் என்பதை புரிந்து கொண்டு ஒரு துறையில் தெளிவான அறிவு இல்லாத மனிதர்கள் இதுபோன்ற எந்த முயற்சியும் செய்தல் கூடாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.