ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 690

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனுக்கு உகந்த இடம் ஒவ்வொரு மனிதனின் மனம்தான். அந்த மனம் சுத்தமாக பரிசுத்தமாக நேர்மையாக நீதியாக சத்திய நெறியில் தர்ம நெறியில் இருந்தால் எந்த இடத்திலும் இறைவன் அருள் மனிதனுக்கு உண்டு. ஒருவன் சுகமாக இருக்க வேண்டுமென்றால் பிறர் சுகத்தை கெடுக்கக்கூடாது. ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் பிறர் நிம்மதியை கெடுக்கக்கூடாது. ஒருவன் பிறரின் வார்த்தைகளால் காயப்படக்கூடாது என்றால் பிறரை வார்த்தைகளால் காயப்படுத்ததாமல் இருக்கவேண்டும். எனவே இதையெல்லாம் மனதிலே வைத்துக் கொண்டு உன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு நீ உன் பக்தி வழியில் தொடர்ந்து செல்லச் செல்ல உன் வாழ்க்கையிலும் நிம்மதி வரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.