ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 438

கேள்வி: சித்தர் அருட்குடில் மற்றும் ததீசியகம் (தம்மை வருத்தி சேவை செய்யும்) திருமண வயதுடைய பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற ஆசிகள்:

இறைவன் அருளால் கூறுகிறோம். இப்பொழுதுதான் கூறினோம். ஒருவன் திருமணம் வேண்டும் குழந்தை வேண்டும் எனும் பொழுது அவற்றால் அவன் நலத்தை அடைவானா? நலத்திற்கு மாறான நிகழ்வை அடைவானா? என்பதை உணர்ந்து இன்னவள் கூறியது போல இத்தனை சேவைகள் செய்கிறானே? இவனுக்கு எதற்கு திருமணம்? என்று இறைவன் அவன் மீது பரிதாபப்பட்டு நடக்க வேண்டிய திருமணத்தையே தடுத்து வைத்திருக்கிறார். மீண்டும் மீண்டும் இன்னவள் இவ்வாறு கேட்க சரி அவனே விரும்புகிறான். நாம் ஏன் தடுக்க வேண்டும்? என்று திருமண பந்தத்தை இறைவன் ஏற்படுத்தி விடுவார். ஒரு மனிதனுக்கு கர்மாவை கழிப்பதில் அத்தனை ஆர்வம். எப்படியாவது திருமணம் செய்து சீக்கிரம் கர்மா குறைய வேண்டும் என்று ஆணும் பெண்ணும் ஆசைப்படுகிறார்கள். எனவே அனைத்து திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் இறைவன் அருளால் திருமணம் நடக்க இத்தருணம் யாங்கள் நல்லாசி கூறுகிறோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.