ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 500

கேள்வி: சேஷபுரீஸ்வரர் கோவிலில் எங்கும் இல்லாதபடி அலைமகளும் கலைமகளும் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். கோஷ்டத்தில் இருக்க வேண்டிய தட்சணாமூர்த்தி உள்ளே சனகாதி முனிவர்களோடு இருக்கிறார்:

இறைவன் கருணையால் சில நுட்பங்கள் இதிலே அடங்கியிருந்தாலும் கூட பொதுவாக இறையின் ஆற்றல் விதவிதமாக வெளிப்படுகிறது. எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்த்துவதுதான் இதன் பொருள். அது ஒருபுறம் இருந்தாலும் அலைமகளும் கலைமகளும் ஒரு இடத்தில் இருப்பது சாத்தியமா? என்று சிந்தித்துப் பார். மாமியாரும் மருமகளும் ஓரிடத்தில் இருக்க இயலுமா? சிந்தித்து பாரப்பா. இருந்தாலும் ஒரே நேரத்தில் மனிதனுக்கு வேண்டிய மூன்று தேவியர்களின் அருளை தரக்கூடிய சிறப்பான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. அங்கு துவார பாலகர்கள் மாறியிருக்கிறார்கள் என்று வேறுவிதமான தத்துவ விளக்கமும் கொண்டிட வேண்டாம். இறையாற்றல் முன்பின்னாக இருந்தாலும் அதும் இறைதான் இதும் இறைதான் என்பதின் பொருள்தான் இது.

இக்கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.