ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 120

கேள்வி: நவராத்திரியின் 9 தினங்களும் கொலு பொம்மைகளை அடுக்கி பூஜை செய்யும் முறை எப்போது ஆரம்பமானது? நவராத்திரியின் தாத்பரியம் என்ன?

இவற்றை தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம். அன்னையின் பெருமை வார்த்தைகளில் அடங்காது. தொடர்ந்து நவராத்திரி பூஜை என்பது மிக மிக உயர்வான பூஜையாகும். இதை கடைபிடிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் சிறப்பை தரும். பக்தி என்பதை விட்டுவிட்டு் முதலில் மனிதர்கள் தமக்குள் ஒற்றுமையையும் தமக்குள் சக்தியை வளர்த்துக் கொள்ள இது உதவும். அது மட்டுமல்ல. இந்த நிலையிலே ஒரு இல்லத்திலே இது போன்ற இறை ரூபங்களையெல்லாம் வைத்து பலரையும் அழைத்து பூஜை செய்து பலருக்கும் ஆடை தானம் அன்னதானம் இவற்றை தருவதன் மூலம் அங்கே இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும் தர வேண்டும் என்கிற தாத்பரியம் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.

ஒரு காலத்திலே வறுமையில் ஆட்பட்டாலும் கூட சில மனிதர்கள் யாசகமாக யாரிடமும் எதையும் பெறமாட்டார்கள். அப்படி பெறுவதை தரக்குறைவாக எண்ணுவார்கள். தானம் தந்தாலும் வாங்க மாட்டார்கள். இது போன்றவர்களை எப்படி காப்பாற்றுவது? பூஜை பிரசாதம் என்றுதான் தர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற கூட்டு வழிபாடுகளும் பூஜைகளும் ஏற்படுத்தப்பட்டன. இன்னும் நவராத்ரியின் பரிபூரண பூஜைகள் எல்லாம் வழக்கொழிந்து போய் வெறும் ஆர்பாட்டம் மட்டுமே இப்பொழுது ஆங்காங்கே நடக்கிறது. அங்கே யாகங்கள் கூட்டு பிராத்தனை செய்ய வேண்டும். குறிப்பாக நாக தோஷம் களத்திர தோஷம் செவ்வாய் தோஷம் போன்ற பல்வேறு தோஷங்கள் கொண்ட ஆண்களும் பெண்களும் இந்த பூஜை செய்வது மிகவும் அவசியம். குறிப்பாக இளம்பெண்கள் மாலை பொழுதிலே ஒன்றுகூடி நல்ல முறையிலே அன்னையின் நாமத்தை உருவேற்றுவது அவர்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை நீக்குவதற்கு மிகவும் உதவும். இது போன்ற பூஜைகள்தான் கலாசாரத்தையும் பக்தியையும் சமூக மேம்பாட்டையும் வளர்க்கக் கூடியது. ஆனால் அதில் உள்ள நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் ஒரு மனிதன் வெறும் தவறான புற சடங்கை மட்டும் பார்த்தால் குழப்பம்தான் எதிரொலிக்கும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.