ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 493

தீய பழக்கங்களால் சிறு பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர்:

அமாவாசை தோறும் அன்னை காளிக்கு வழிபாடு செய்தால் இது போன்ற தவறான பழக்கங்களுக்கு தத்தம் பிள்ளைகள் ஆட்படாமல் காத்துக் கொள்ளலாம். இது பக்தி மார்க்க வழி. அடுத்ததாக ஒரு சமுதாயம் தவறான ஒரு செயலை செய்வதாக மனிதன் எண்ணுகிறான். அதே சமுதாயம் பல நல்ல விஷயங்களையும் செய்து கொண்டு இருக்கிறது. அதற்கு எத்தனை மனிதர்கள் ஆதரவு காட்டுகிறார்கள்? ரத்த தானம் செய்யுங்கள் என்று கூறினால் அதைக்கண்டு மனிதன் இன்னும் அஞ்சுகிறான். உடலை தானம் தரலாம் என்று நாங்கள் கூறினாலும் அது குறித்து இன்னும் மூடப்பழக்கங்களில் மூழ்கிக் கொண்டு இன்னமும் மூடத்தனமாகவே வாழ்கிறான். விழி தானம் செய்யுங்கள் என்றால் எத்தனை பேர் முன் வருகிறார்கள்? எனவே நல்ல விஷயங்களை பார்க்க சிந்திக்க பின்பற்ற குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். அடுத்ததாக கடுமையான பித்ரு தோஷங்கள்தான் குழந்தைகளுக்கு தீய பழக்க வழக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே மனம் தளராமல் நாங்கள் கூறிய வழிபாட்டை செய்வதோடு கால பைரவர் வழிபாட்டையும் செய்து வந்தால் நல்ல பலன் உண்டு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.