ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 586

கேள்வி: ஐயனே தவிர்க்க முடியாமல் ஒரு பாம்பை கொல்ல நேர்ந்தால் என்ன செய்வது?

அப்படித்தானப்பா சித்தர்கள் இருக்கும் பகுதிக்கு மனிதர்கள் வந்து விட்டால் நாங்களும் தவிர்க்க முடியாமல் அவர்களை கொன்று விடலாமா? பாம்புக்கு தெரியுமா? பாம்பு திட்டமிட்டு ஏதாவது செய்கிறதா? ஆனால் திட்டமிட்டு பொறி வைத்து அதை பிடித்து தோலை உரித்து வியாபாரம் செய்வது யார்? எனவே வாகனத்தில் செல்லும் பொழுது கண் பார்வையில் சிக்காமல் சில ஜீவன்களை கொல்ல நேர்ந்தால் கூட பிரம்மஹத்தி தோஷம் அவனுக்கு பீடிக்கும் என்றால் மற்றவைகளுக்கு நீயே யோசித்துக்கொள். என்றாலும் ஒரு ஜீவன் ஒரு மனிதன் மூலம் விதி முடிய வேண்டும் என்று இருக்கும் பொழுது இவ்வாறு நடப்பது உண்டு. அதனால் இவனுக்கு கர்மா வர வேண்டும் என்ற விதி இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.