ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 160

ஒரு அன்பர் மகாலட்சுமி யாகம் செய்துவிட்டு வந்தவுடன் அகத்தியர் பெருமானின் அருள்வாக்கு:

இக்கேள்விக்கு திரு என்ற ஒரு தமிழ் வார்த்தையை வைத்து பதில் சொல்லி தமிழின் சிறப்பையும் அழகையும் காட்டியிருக்கிறார் அகத்தியர்.

திரு என்றால் மகாலட்சுமி என்று பொருள். திருப்தியாய் திரு யாகம் (திரு = மகாலட்சுமி) அன்னை திரு யாகம் அது அக்னி அணையா திரு யாகம் சிறப்பாய் அமைந்தமைக்கு இறைவன் அருளால் யாம் அருளாசி கூறுகிறோம்.

இறையிடம் கேட்கா திரு

எதையும் எதிர்பாரா திரு

இறையிடம் ஒன்றும் வேண்டாம் என் றிரு

இறையிடம் என்றென்றும் அன்பாய் இரு

பஞ்ச புலனை (ஐந்து புலனை) அடக்கி இரு

மனம் அலையாமல் அதனை இறுக்கி இரு

ஒவ்வொரு நாளும் அன்னை திரு வை (மகாலட்சுமி) எண்ணுங்கால் அந்த மெய்ப்பொருளே உண்மை பொருள் என்பதை உணர்ந்தே இரு

கேட்கா திரு. ஆனால் யாருக்கும் தரா இரா என்ற நிலையிலே அள்ளித் தரும் நிலை வரும் வரை மனம் அதில் ஆழும் வரை இருக்க இரு.

அந்த அன்னை திரு அது அனைவரையும் அணைக்கும் திரு. கேட்பதை கொடுக்கும் திரு அந்த உயர் திரு மைந்தனை உயர்த்தும் திரு.

எதையும் எண்ணா திரு அதைத் தவிர வேறு எதையும் எண்ணா திரு.

அன்னை திரு வின் திரு வடியை எண்ணும் திரு இயம்பு திரு. உயர்வு திரு. இப்படி வரும் திரு.

சில சமயம் போகும் திரு. இருந்தாலும் வரும் திரு போகும் திரு. எண்ணா திரு. அதிலே உயர் திரு.

இத் திரு அத் திரு எத் திரு? என்று பாராமல் காத் திரு காத் திரு.

அன்னை திரு என்றும் அனைவரையும் ரட்சித் திரு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.