ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 188

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 188

கேள்வி: கணினியில் ஜாதகம் கணிக்கும் பொழுது ஸ்ரீ சூரிய சித்தாந்த அயனாம்ச முறையையும் எடுத்துக் கொள்ளலாமா?

இப்பொழுது உள்ள அனைத்து முறையிலும் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் பாவ வினைகளால் இடை செருகல்களும் தவறுகளும் ஏற்பட்டுதான் இருக்கிறது. ஆயினும் பாதகமில்லை. வாக்கிய முறையை பின்பற்றுவது பொதுவாக நன்மையைத் தரும். அதற்கு மாறான முறையை பின்பற்றக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. எப்படிப் பார்த்தாலும் அடிப்படை விதியை மனிதனால் கணிப்பது என்பது கடினம். ஏனென்றால் ஒரு மனிதனுக்கு கிரகங்கள் வக்ரமாவது தெரிகிறது. ஆனால் லக்னமே வக்ரமாவது என்பதெல்லாம் இறை சூட்சுமம் அறிந்த மகான்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் நீ கூறிய முறையைக் கூட தாராளமாக பின்பற்றலாம். ஆனாலும் கூட எம்மைக் கேட்டால் இங்கே தமிழ் மண்ணிலே புழங்குகின்ற வாக்ய முறைகளை தொடர்ந்து பின்பற்றுவது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

கேள்வி: ஆஞ்சிநேயர் தன் இதயத்தைப் பிளந்து காட்டிய பொழுது அதில் ராமரும் சீதையும் காட்சியளித்ததாக இதிகாசம் கூறுகிறது. இது எந்த நோக்கில் கூறப்பட்து? அனுமன் போல் அனைவரும் சிறந்த பக்தர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் தத்துவார்த்த விளக்கங்கள் உண்டா?

இறைவன் அருளாலே ஒரு காதலன் தன் காதலியைப் பார்த்து என்ன கூறுவான்? என் இதயத்தில் நீ இருக்கிறாய் என்று கூறுவான். அப்படிதான் காதலியும் கூறுவாள். எனவே என் சிந்தனை என்னுடைய எண்ணங்கள் என்னுடைய நோக்கம் நான் செய்கின்ற செயல்கள் அனைத்தும் நீயாக இருக்கிறாய் யாதுமாகி நிற்கிறாய் என்பது போல உண்ணும் உணவு பருகும் நீர் சுவாசிக்கும் காற்று இன்னும் நான் செய்கின்ற அனைத்து செயல்ளும் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்த ராமபிரான் மீது மால் தூதனாகிய ஆஞ்சிநேயர் கொண்ட பக்தியை விளக்குவதற்காக இப்படி பரிபூரண சரணாகதியிலே ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சித்திரம் போடப்பட்டது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.