ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 534

கேள்வி: எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்?

இறைவன் அருளால் எந்த மந்திரத்தை கூறினாலும் மனிதநேயம் இல்லாமல் மனித பண்பாடு இல்லாமல் நல்ல எண்ணங்கள் இல்லாமல் சத்திய வாழ்க்கை இல்லாமல் தர்மம் இல்லாமல் மந்திரங்களை கூறினால் அதனால் பலனேதும் இல்லை. பஞ்சாட்சரத்தை கூறு என்று நாங்கள் கூறுவதாக கொள்வோம். ஏன்? அட்டாட்சரம் மந்திரத்தை கூறக்கூடாதா? என்ற ஒருவன் கேட்பான். அட்டாட்சரத்தை கூறு என்றால் ஏன் பிரம்மதேவர் மந்திரத்தை கூறக்கூடாதா? என்று கேட்கப்பான். சரி பிரம்மதேவர் மந்திரத்தை கூறு என்றால் என் சடாட்சரத்தை கூறக்கூடாதா? என்பான். தெய்வத்தை எந்த மந்திரத்தை கொண்டு வேண்டுமானாலும் வணங்கலாம் தவறில்லை. அதோடு நாங்கள் கூறுகின்ற தர்ம வழியையும் கடைபிடித்தால் கட்டாயம் நூற்றுக்கு நூறு விழுக்காடு இறைவன் அருள் உண்டு. பாவங்களில் இருந்து விடுபடலாம். முன்பே கூறியிருக்கிறோம் ஏதாவது இறை நாமத்தை முன் அதிகாலையில் வடகிழக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து குறைந்தபட்சம் இரண்டரை நாழிகை அன்றாடம் உருவேற்றி வந்தால் கட்டாயம் நீ கூறிய நன்மை அனைவருக்கும் சித்திக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.