ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 91

கேள்வி: வியாபாரம் சிறக்க எந்த ஸ்தலம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

இறைவனின் கருணையைக் கொண்டு நல்ல முறையில் வியாபாரம் தொழில் அமைந்து அதனை அலட்சியம் செய்தவர்க்குதான் மறுபிறவியிலே சரியான தொழிலும் வியாபாரமும் அமைவதில்லை. அடுத்ததாக வியாபாரத்தில் பொய் சொல்லலாம் தவறொன்றுமில்லை. பொய் சொல்லாமல் இருந்தால் வியாபாரத்தில் தோற்றுவிடுவோம் என்ற சித்தாந்தம் மனிதரிடம் இன்றுவரை நிலவி வருகிறது. இதுவும் தொழில் தோஷம் ஏற்பட காரணமாக இருக்கிறது. எத்தனை நஷ்டங்கள் கஷ்டங்கள் வந்தாலும் ஒருவன் வியாபாரத்தை நேர்மையாகத்தான் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதர்களால் வெறும் ஏட்டளவில் மட்டும்தான் ஏற்க முடிகிறது. நடைமுறையில் யாரும் அப்படி இருப்பதில்லை. அப்படியிருந்தால் உடனடியாக நஷ்டம் வருகிறது என்று பயந்து வியாபாரத்தில் பொய் சொல்ல மனிதன் துவங்கி விடுகிறான். இப்படி செய்யாவிட்டால் வியாபாரத்தில் ஜெயிக்க முடியாது என்று சமாதானம் கூறுகிறான். அதனால்தான் வியாபார ஸ்தானத்திலே தோஷத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். இருந்தாலும்கூட திருவெண்காடு ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் புதன்கிழமை தோறும் புதனுக்கும் பெருமாளுக்கும் தச வதன நெய் தீபம் ஏற்றுவதும் இன்ன பிற வழிபாடுகள் செய்வதும் தச தோஷ நிவர்த்தி யாகம் செய்வதும் தச லாப அபிவிருத்தி யாகம் செய்வதும் தக்க வியாபாரமோ தொழிலோ அறிந்த ஏழைக்கு தொழிலைத் துவங்க உதவி செய்வதும் இந்த தோஷத்தை நீக்கி வியாபாரத்தில் வெற்றியைத் தரும்.

திருவெண்காடு கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.