சுலோகம் -65

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #18

அழிவற்ற விளக்க முடியாத நித்தியமான ஜீவாத்மாவினுடைய நீ பார்க்கும் அனைத்து உடல்களும் அழியக்கூடியது. ஆகவே பரதகுலத் தோன்றலே அர்ஜூனா நீ போர் புரிவாயாக.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நாம் காணும் இந்த அழியக்கூடிய உடல்கள் அனைத்திலும் காணமுடியாததும் அழிவற்றதும் அறிய இயலாததுமாகிய ஆத்மா தன் கர்மாவை தீர்த்துக் கொள்வதற்காக சில காலம் மட்டுமே தங்குகிறது. நீ தர்மப்படி யுத்தம் செய்து இந்த உடலை மட்டுமே அழிக்கிறாய். ஜீவாத்மாவை அல்ல ஆகவே யுத்தம் செய் என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி?

அர்ஜூனனை பரதகுலத் தோன்றலே என்று கிருஷ்ணர் ஏன் அழைக்கிறார்?

பரதகுலத்தில் தோன்றிய அரசர்கள் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து அதனை செயல்படுத்தினார்கள். அந்த குலத்தில் வந்த நீயும் அது போல் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து யுத்தம் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொல்வதற்காக அர்ஜூனனை கிருஷ்ணர் பரதகுலத் தோன்றலே என்று அழைக்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.