சுலோகம் -52

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #5

மேன்மை பொருந்திய பெரியவர்களை கொல்வதை விட இவ்வுலகில் பிட்சை எடுப்பதால் கிடைக்கும் அன்னத்தை உண்பது சிறந்தது அல்லவா? இவர்களை கொன்ற பின்னர் அவர்களுடைய உடமைகள் அனைத்தும் அவர்களின் ரத்தத்தால் நனைந்திருக்கும். அதனை நாம் எவ்வாறு அவர்கள் இருந்த இடத்திலேயே நின்று அனுபவிக்க இயலும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சத்திரியர்கள் பிட்சை எடுத்து சாப்பிட்டு உடலை வளர்க்கக் கூடாது என்பது நியதி இவ்வாறு செய்வது இகழ்ச்சியான செயல். மேன்மை பொருந்திய பெரியவர்களை எதிர்த்து யுத்தம் செய்து அவர்களை கொல்வதை விட சத்திரிய தர்மத்தை விட்டு விட்டு பிட்சை எடுத்து உண்பது மேல் என்றும் யுத்தம் செய்து அவர்களை கொன்ற பிறகு அவர்கள் இருக்கும் இந்த மண்ணில் அவர்களின் ரத்தக் கறை படிந்து இருக்கும். இந்த இடத்தில் மகிழ்ச்சியாக எப்படி இருக்க முடியும் என்று அர்ஜூனன் தன் கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்கிறான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.