பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-54
அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். கேசவா சமாதியில் நிலைபெற்று பரமாத்மாவை அடைந்த உறுதியான அறிவுடையவன் என்ன சொல்வான்? அவன் என்ன செய்வான்? எவ்வாறு நடந்து கொள்வான்? எதனை அடைவான்?
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
கிருஷ்ணர் கூறிய அறிவுரைகளை கேட்ட அர்ஜூனன் மேலும் தனது சந்தேகங்களை கிருஷ்ணரிடம் கேட்கிறான். உறுதியான மன வலிமையாலும் அறிவினாலும் சமாதி நிலை அடைந்தவர்கள் சுற்றி இருப்பவர்களிடம் என்ன பேசுவார்கள். தனது கடமைகளாக அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்வார்கள். இறுதியில் அவர்கள் எதனை சென்று அடைவர்கள் என்று கிருஷ்ணரிடம் அர்ஜூனன் கேள்வி கேட்கிறான்.
