பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #17
இந்த உலகில் உள்ள அனைத்தும் ஆத்மாவினால் நிறைந்துள்ளன. இந்த ஆத்மா என்பது அழியாமல் உள்ளது என்பதை நீ அறிந்து கொள்வாயாக. அழிவே இல்லாத இந்த ஆத்மாவிற்கு அழிவு என்பதை யாராலும் எற்படுத்த முடியாது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த உலகத்தில் படைக்கப்பட்ட புல் முதல் அனைத்து உயிர்களும் ஆத்மாவினால் நிறைந்துள்ளது. இந்த ஆத்மா அனைத்தும் பரமாத்மாவிடம் சென்று சேரும் வரையில் தனது உடலை மாற்றிக் கொண்டே இருக்குமே தவிர எப்போதும் அழியாமல் இருக்கும். இந்த ஆத்மாவை அழிக்கும் வல்லமை இந்த உலகத்தில் யாருக்கும் இல்லை. இதனை தெரிந்து கொள்வாயாக என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.