சுலோகம் -98

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-51

ஞானம் உள்ளவர்கள் தங்களது சமநிலையான புத்தியின் காரணமாக கர்மத்தின் பலனை துறந்து விடுகிறார்கள். இதன் மூலம் பிறப்பு என்ற பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆனந்தமான மோட்சத்தை அடைகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஞானம் உள்ளவர்கள் தாங்கள் செய்யும் செயல்களில் சரிசமமான மனநிலையில் இருந்து செய்கிறார்கள். இந்த ஞானம் பெற்ற மனநிலையில் செயல்களை செய்வதினால் செயல்களின் பலனான நன்மை தீமை மற்றும் மகிழ்ச்சி துன்பம் போன்ற அனைத்து விதமான பலன்களும் அவர்களை சென்று சேர்வதில்லை. பலன்கள் கன்மங்கள் ஏதும் இல்லாததினால் இந்த பிறவியில் தங்களுக்கான கடமைகள் முடிந்ததம் அவர்கள் உலக பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆனந்தமான மோட்சத்தை அடைகிறார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.