சுலோகம் -114

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-67

நீரில் போய்க் கொண்டிருக்கும் ஓடத்தைக் காற்று அடித்துக் கொண்டு போவது போல போகங்களில் சஞ்சரிக்கின்ற புலன்களில் எந்த ஒரு புலனும் மனம் ஒட்டி இருக்கின்றதோ அந்த ஒரு புலன் மனம் வசப்படாத இந்த மனிதனின் புத்தியைக் கவர்ந்து சொல்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உயிர்கள் இறைவனை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிறவி என்னும் ஓடத்தில் பயணம் செய்யும் போது மனமான காற்றானது தனியாக அமைதியாக பயணிக்கும் போது இறைவனை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் மனமான காற்றானது புத்தியுடன் இணைந்தவுடன் ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலன்களுடன் இணைந்தாலும் அது ஆசைகளின் வழி செல்லும் போது புலன்களுடன் இணைந்த மனமானது பெருங்காற்று தன் செல்லும் வழியில் ஓடத்தை இழுத்துச் செல்வது போல் மனிதனின் புத்தியை கவர்ந்து இழுத்துச் செல்கிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.