பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #13
ஜீவாத்மா இருக்கும் இந்த உடல் எவ்வாறு இளமை வாலிபப்பருவம் பின்பு முதுமை ஏற்பட்டு மரணமடைகிறதோ அப்படியே அதற்கு வேறு உடலும் வந்து சேர்கிறது. இவ்விசயத்தில் தீரன் கலங்கமாட்டான்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
ஜீவாத்மா இருக்கும் இந்த உடல் பிறந்ததும் குழந்தைப் பருவம் அதன் பிறகு இளமைப் பருவம் அதன்பிறகு முதுமைத் தன்மை அடைந்து இந்த உடலில் இருக்கும் உயிர் என்ற மூச்சுக்காற்று நின்று விடுகிறது. அப்போது அந்த உடலில் இருந்த ஜீவாத்மா வெளியே வந்து வேறு உடலை எடுத்துக் கொள்கிறது. இப்படியாக ஜீவாத்மா இறைவனுடன் கலக்கும் வரை பல உடல்களை எடுத்துக் கொள்கிறது. ஜீவாத்மா எத்தனை உடல்களை எடுத்தாலும் அதற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஜீவாத்மா அழிவதில்லை நித்யமாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட மன உறுதியுள்ளவர்கள் இதனைக் கண்டு கலங்குவதில்லை இந்த கருத்தை கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு விளக்குகிறார்.
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2021/09/60.jpg?resize=598%2C582&ssl=1)