பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-36
உன்னுடைய எதிரிகள் உன்னை நிந்தித்துப் பலவிதமான சொல்லத் தகாத வார்த்தைகளை கூறுவார்கள். உன் திறமையை பழிப்பார்கள். அதைவிட அதிகம் துயரம் கொடுக்கக் கூடியது வேறு என்ன இருக்கும்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
உன்னுடைய எதிரிகளான கௌரவர்கள் உன்னை கோழை என்றும் மரணத்திற்கு பயந்தவன் என்றும் இதுநாள் வரை நீ தவம் செய்து யுத்தம் செய்து பெற்ற உன்னுடைய புகழை கலங்கப்படுத்தி சொல்லத் தகாத வார்த்தைகளால் பேசுவார்கள். மேலும் இதற்கு முன் நீ செய்த யுத்தம் அனைத்திலும் திறமை இல்லாதவர்களுடன் யுத்தம் செய்து வென்றிருக்கிறாய். இப்போது திறமையுள்ளவர்களுடன் யுத்தம் செய்தால் தோற்று விடுவோம் என்று பயந்து ஓடுகிறாய் என்று உனது திறமையை பழிப்பார்கள். உனது வாழ்க்கையில் இந்த தகாத வார்த்தையை விட துயரம் கொடுக்ககூடிய வார்த்தை வேறு ஒன்று இருக்காது என்று ஆகவே இந்த யுத்தத்தை செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
