சுலோகம் -93

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-46

எல்லாப் பக்கங்களிலும் நிறைந்த நீர் நிலையை அடைந்த பிறகு சிறிய நீர் நிலைகளினால் எவ்வள்ளவு பயன் இருக்கிறதோ பிரம்மத்தை தத்துவ ரீதியாக உணர்ந்த பிராமணனுக்கு அனைத்து வேதங்களினாலும் அவ்வளவு பயன் தான் கிடைக்கும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தண்ணீர் தாகம் கொண்ட ஒருவனுக்கு எவ்வளவு பெரிய நீர் நிலைகள் கிடைத்தாலும் தாகம் தீரும் அளவிற்கே தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் குடித்து தாகம் தீர்ந்ததும் அவனுக்கு பெரிய மற்றும் சிறிய கிணறு குளம் போன்றவைகள் தேவைப்படாது. அது போலவே மோட்சத்தை தேடும் ஒருவனுக்கு வேதங்களில் எவ்வளவு கருத்துக்கள் இருந்தாலும் மோட்சத்திற்கு செல்லத் தனக்கு தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வான். மீதி உள்ளதை பற்றி நினைக்க மாட்டான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.