சுலோகம் -91

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-44

இவர்கள் தங்களின் பேச்சு மற்றும் செயல்களினால் தங்கள் அறிவை இழந்து நிற்கிறார்கள். மேலும் மேலும் சொர்க்கத்தை அனுபவிப்பதிலேயே ஆவலுடன் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அறிவற்றவர்களின் மனம் ஒரு நிலைப்பட்டு அவர்களுக்கு கர்ம யோக புத்தி உண்டாக வாய்ப்பே இல்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இவ்வாறான பேச்சு மற்றும் செயல்களினால் தங்களின் சுய சிந்தனையை விட்டு அறிவை இழந்து நிற்பார்கள். அனுபவிக்கும் சுகமே சொர்க்கம் என்று பந்தம் பாசம் ஆகியவற்றை அனுபவிப்பதிலேயே ஆர்வத்துடன் இருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்களுக்கு மனம் ஒரு நிலைப்படாது. இவர்களுக்கு கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும் புத்தியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.