சுலோகம் -95

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-48

அர்ஜூனா பற்றினை நீக்கி வெற்றி தோல்விகளை சரிசமமாக எண்ணி தொழில்களை செய். நடுநிலையான எண்ணத்துடன் தொழில்களை செய்வதே யோகம் எனப்படும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த ஒரு செயல் செய்தாலும் அதன் விளைவாக வரும் பலனான வெற்றியையும் தோல்விகயையும் சரிசமமாக எண்ணி தொடர்ந்து செயல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். வெற்றி வந்தால் மகிழ்வதும் தோல்வி வந்தால் துயரப்படாமலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பது யோகம் எனப்படும் இந்த யோகத்தில் இருந்து நீ உன் கடமையை செய்வாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.