சுலோகம் -105

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-58

சுலோகம் -105

ஆமை எல்லாப் பக்கங்களில் இருந்தும் தனது உறுப்புகளை உள்ளிளுத்துக் கொள்வது போல மனிதன் புலன் நுகர் பொருட்களில் இருந்து புலன்களை உள்ளிழுத்துக் கொள்கிறோனோ அப்போது அவனுடைய புத்தி உறுதியானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆமையானது ஆபத்துக் காலங்களில் தனது உடல் உறுப்புகளை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மையுடையது. அது போல் மனிதனின் புலன்கள் ஆசைகளின் காரணமாக இந்த உலகப் பற்றுகளின் மீது செல்லும் போது புலன்களை தனக்குள் இழுத்து அடக்கிக் கொள்ள வேண்டும். எந்த மனிதன் இது போல் தன்னுடைய புலன்களை அடக்கிக் கொள்கிறானோ அப்போது அவனுடைய புத்தி உறுதியானது என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.