சுலோகம் -96

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-49

சம நிலையில் உள்ள மனதுடன் கூடிய யோகம் என்பதை விடப் பயன் கருதிச் செய்யப்படும் கர்மம் மிகவும் தாழ்ந்தது. ஆகவே அர்ஜூனா சமமான புத்தியில் தஞ்சம் அடைவாய். பலன் மூலம் உந்தப்பட்டு கர்மம் செய்பவர்கள் பரிதாபப்பட வேண்டியவர்களே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

வெற்றி தோல்வி மற்றும் மகிழ்ச்சி துயரம் என்று எதுவும் இல்லாமல் சமமான மனநிலையில் செய்யப்படும் செயலானது மிகவும் உயர்ந்தது. பலனை எதிர்பார்த்து செய்யப்படும் செயல்கள் மிகவும் தாழ்வானது. ஆகவே அர்ஜூனா சமமான மனநிலையில் எப்போதும் இருந்து செயல்களைச் செய். பலனை எதிர்பார்த்து செயல்களை செய்பவர்கள் மீண்டும் மீண்டும் அதன் பலனை அனுபவிக்க வேண்டி பிறப்பெடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆகையால் அவர்கள் மிகவும் பரிதாபப்பட வேண்டியவர்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.