சுலோகம் -67

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #20

இந்த ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. இந்த ஆத்மா பிறப்பற்றவன் நித்தியமானவன் எக்காலத்திலும் உள்ளவன் பழமையானவன். உடல் கொல்லப்படும் போது இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த ஒரு பொருளுக்கும் ஆறு விதமான செயல்கள் உண்டு. அவை 1. உருவாகுதல் 2. உண்டான பிறகு அதனது தன்மைக்கு ஏற்ப இருப்பது 3. வளர்வது 4. தன்மைக்கு ஏற்ப உருமாறி அதன் செயல்களை செய்வது. 5. தேய்வது 6. அழிவது. மேற்சொன்ன ஆறு விதமான செயல்களும் ஆத்மாவிற்கு இல்லை. ஆத்மா இறைவனிடம் இருந்து பிரிந்து வந்து பல பிறவிகள் எடுத்து பலவிதமான உடல்களில் வசித்து பின்பு உடல் அழிந்ததும் வேறு ஒரு உடல் எடுக்கின்ற ஆத்மாவனது தனது கர்மங்கள் அனைத்தையும் தீர்த்த பின்பு இறைவனிடமே சென்று சேர்ந்து விடுகிறது. ஆதி காலத்தில் இருந்தே இருக்கின்ற ஆத்மாவானது எப்போதும் நித்தியமாக இருக்கும். உடலில் சிறிது காலம் இருக்கும் இந்த ஆத்மா உடல் கொல்லப்பட்டாலும் அழிவதில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.