சுலோகம் -94

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-47

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அவற்றின் பயன்களில் எப்போதுமே உனக்கு அதிகாரமில்லை. எனவே அந்தப் பலன்களின் மீது விருப்பம் கொள்ளாதே. இதன் காரணமாக தொழில் செய்யாமலும் இருக்காதே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா உனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்ய உனக்கு அதிகாரமுண்டு. ஆனால் செய்யும் தொழிலுக்காக பலனை நீ எதிர்பார்த்தால் அதனை நீ அனுபவிப்பவனாக மாறிவிடுவாய் மேலும் அது உன்னை சம்சார பந்தத்தில் பிணைத்து வைத்து விடும். அப்படி நீ இருகக் கூடாது. ஏனென்றால் பலனை எதிர்பார்த்து செயல்களை புரிபவன் அதன் பலனை அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறப்பான். இப்போது ஒரு சிந்தனை தோன்றும். செயலை செய்து அதற்கான பலனை எதிர் பார்ப்பதை விட செயலை செய்யாமலேயே இருந்து விடலாமே என்று தோன்றலாம். ஆனால் விதிக்கப்பட்ட தொழிலை செய்யாமல் போனால் அந்த செயலை செய்ய வேண்டி மீண்டும் பிறப்பெடுக்க வேண்டியது இருக்கும். ஆகவே அர்ஜூனா உனக்கு விதிக்கப்பட்ட தொழிலில் எந்த பலனையும் எதிர்பார்ப்பில்லாமல் செய்து முடிப்பாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.