சுலோகம் -90

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-43

இவர்கள் உலகியல் இன்பத்தில் திளைத்தவர்களாகவும் சொர்க்கத்திற்கு செல்வதில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மீண்டும் மீண்டும் பிறவி அளிக்கவல்லதும் கர்மங்களில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் ஆகிய பேச்சுக்களை மட்டுமே பேசுவார்கள். மேலும் தங்களுக்கு இன்பத்தையும் போகத்தையும் கொடுக்கும் செயல்களையே செய்து வருவார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இல்லறமே நல்லறம் என்ற வரிகளின் உள் விளக்கத்தை தெரிந்து கொள்ளாமல் வரிகளின் விளக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு இதுவே சிறந்தது இதனை அனுபவித்தால் சொர்க்கத்திற்கு சென்று விடுவோம் என்று நினைத்துக் கொண்டு பாசம் பந்தம் ஆகியவற்றிற்குள் சிக்கி அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி அளிக்கும் கர்மங்களிளேயே ஈடுபட்டுக் கொண்டு அதனைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.