பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #4
அர்ஜூனன் கூறுகிறான். பகைவர்களை அழிப்பவனே மதுசூதனா நான் போர்க்களத்தில் எவ்வாறு அம்புகளினால் பாட்டனார் பீஷ்மரையும் ஆச்சாரியார் துரோணரையும் எதிர்த்துப் போரிடுவேன்? அவர்கள் இருவரும் பூஜிக்கத் தக்கவர்கள்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
பூஜிக்கத் தக்க பெரியவர்களை சொல்லால் கூட துச்சமாக நினைத்து பேசுவது பாவம் என்று சொல்லப்படுகின்ற போது அவர்கள் முன் எதிர்த்து நின்று அவர்களின் மீது கூரான அம்புகளை ஏவி எப்படி யுத்தம் புரிவேன்? இந்தப் பெரியவர்களை எதிர்த்து யுத்தம் செய் என்று எப்படிச் சொல்கிறாய்? இந்த பாவத்தை எப்படி நான் செய்வேன்? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்கிறான்.