சுலோகம் -103

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-56

துன்பங்கள் நேரும் போது மனம் கலங்காதவன் சுகங்கள் ஏற்படும் போது அவற்றில் சிறிது கூட ஆசைப்படாதவன் விருப்பம் பயம் கோபம் ஆகிய இவற்றை முற்றும் அறுத்தவன் மன உறுதியானவன் என்று சொல்லப்படுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

வாழ்க்கையில் துன்பம் ஏற்படும் போது சிறிதும் கலங்காமல் வருத்தப்படாமல் இருப்பவனும் மகிழ்ச்சி ஏற்படும் போது இந்த மகிழ்ச்சி அப்படியே தொடர வேண்டும் என்று அதன் மீது ஆசைப்படாதவனும் இவ்வுலகத்தில் அழியக்கூடிய பொருட்கள் மீது விருப்பம் இல்லாதவனாகவும் இவ்வுலகத்தில் உள்ள எதைக் கண்டும் பயம் இல்லாதவனாகவும் மரணம் என்ற ஒன்று அருகில் வந்தாலும் அதற்கும் பயம் இல்லாதவனாகவும் அகங்காரம் ஆணவத்தின் வெளிப்பாடான கோபம் என்பது இல்லாதவனாகவும் இருப்பவன் எவனோ அவனே மன உறுதியுடையவன் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.