சுலோகம் -102

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-55

சுலோகம் -102

அர்ஜூனா ஒருவன் தன் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தையும் அறவே துறந்து தனது ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறானோ அவன் உறுதியான மன உறுதியுடையவன் என்று அழைக்கப்படுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உலகப் பற்றுகள் மற்றும் தனது உறவு முறைகளால் வரும் பந்தம் பாசம் மற்றும் செல்வங்கள் மீது உள்ள பற்று என அனைத்து ஆசைகளையும் முற்றிலும் துறந்தவன். மற்றும் உலக ரீதியாக மகிழ்ச்சி வந்தால் உடனே மகிழ்ச்சி அடையாமலும் துக்கம் வந்தால் உடனே துக்கப் படாமலும் எது நடந்தாலும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவன். மற்றும் புகழ் ஏற்பட்டால் அதனால் மகிழ்ச்சி அடையாமலும் யாரேனும் இகழ்ந்தால் மனம் வருத்தப்படாமலும் மனதை ஓரே நிலையில் வைத்திருப்பவன் எவனோ அவன் ஆத்மா எது ஆத்மா இல்லாதது எது என்ற ஞானத்தை பெறுகிறான். அவனே அனைத்தையும் துறந்தவன் ஆகிறான்.

இன்பம் மகிழ்ச்சி இவை அனைத்தும் வெளியில் இருந்து வருபவையாகும். அவை வந்தவுடன் உடனே சென்று விடும். ஆனால் பேரானந்தம் என்று சொல்லப்படுவது தனக்குள்ளேயே கிடைப்பதாகும். அது உடனே செல்லாது. அந்த பேரின்பத்திலேயே தனக்குள்ளேயே பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பவன் எவனோ அவனே மன உறுதியுடையவன் என்று அழைக்கப்படுகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.