ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 170

கேள்வி: உங்களுக்கு சிஷ்யன் யார்?

எம்மை பொருத்தவரை எங்கெல்லாம் தர்மம் நடக்கிறதோ யாருக்கெல்லாம் தர்மத்தின் மீது நம்பிக்கை இருக்கிறத யாருக்கெல்லாம் எத்தனை துன்பத்திலும் தர்மத்தை விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறதோ சத்தியத்தை விடக்கூடாது என்ற நம்பிக்கை இருக்கிறதோ அவனெல்லாம் எமது சிஷ்யர்களே அதனையும் தாண்டி எமது சேய்களே.

கேள்வி: சொற்றுணை வேதியன் என்னும் பதிகத்தில் சொல் அக விளக்கது என்பதன் பொருள் என்ன?

அதிலேதான் அர்த்தம் வெளிப்படையாக தெரிகிறதே அப்பா. சொல் அக விளக்கது சோதி உள்ளது. அகத்திலே ஜோதியை பார்க்க வேண்டும். சிவாய நம நம சிவாய நமோ நாராயணா எனப்படும் அந்த மந்திர சொற்கள் அகத்திலே இருந்து சொல்ல சொல்ல சொல்ல அகமே ஜோதி அகம் ஆகி ஜோதி விளக்கமாக எரியுமப்பா.

கேள்வி: கோவில்களில் சில சிலைகள் பின்னமாகி இருப்பது ஏன்?

திதாக சிலா ரூபங்கள் வந்தாலும் முந்தைய சிலா ரூபங்களை அகற்றாமல் அதுவும் ஆலயத்தின் ஒரு புறத்தே வைக்கப்பட வேண்டும். முற்காலத்தில் ஆலயத்தின் மூலஸ்தானத்திலே குறிப்பாக அத்தனை மாடக் கோவில்களின் அடியினில் ரகசிய நிலவரை அமைக்கப்பட்டிருக்கும். புதிய சிலா ரூபங்களும் பின்னமான சிலா ரூபங்களும் வைக்கப்பட்டிருக்கும் என்றாலும் பின்னமான சிலா ரூபங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட வேண்டும்.

கேள்வி: இருப்பதில் கொடு கொடுப்பதில் எடு விளக்கம் என்ன?

இருப்பதில் கொடு இது சாதாரண நிலை. இருப்பதையே கொடு இது உயர்வு நிலை. கொடுப்பதில் எடு என்றால் என்ன பொருள்? ஒரு மனிதன் கொடுத்துக் கொண்டே இருந்தால் அதனால் புண்ணியம் சேருகிறது அல்லவா? அந்த புண்யத்தை அவனுக்கு ஆகாத விதி காலம் வரும் போது அதை எடுத்து அவனுக்கு பயன்படுத்துவோம் இதுதான் எங்கள் அர்த்தம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.