ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 449

கேள்வி: மனம் தடுமாறி தீய வழியில் செல்லும்பொழுது எந்த இறை நாமத்தை ஜபிப்பது?

மனம் தடுமாறாமல் இருக்க மனம் சபலத்தில் ஆழாமல் இருக்க மனம் சாத்வீக எண்ணங்களோடு இருக்க ஸ்ரீ ராம நாமத்தை ஜபிக்கலாம். ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். பஞ்சாட்சரத்தை ஜபிக்கலாம். அஷ்டாக்ஷரத்தை ஜபிக்கலாம். இவையனைத்தும் சிறப்புதான். எதுவும் ஒன்றுக்கொன்று குறைவில்லை. இதோடு இன்னமும் சிறப்பாக மனம் அடங்குவதற்கு உச்சிஷ்ட மகாகணபதியின் மூல மந்திரத்தை அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து உருவேற்றிக் கொண்டே வந்தால் மனம் சலனங்களுக்குள் ஆட்படாமல் இருப்பதற்கு நல்லதொரு நிலையை நோக்கி செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். இது பக்தி வழி. பக்தியை ஏற்றுக் கொள்ளாத மனிதருக்கு அறிவு பூர்வமாகக் கூறுவதென்றால் ஒரு செயலை செய்யும் பொழுதோ அல்லது ஒரு எண்ணத்தை எண்ணும் பொழுதோ அவன் எப்படி சிந்திக்க வேண்டும்? என்றால் உதாரணமாக ஒருவன் ஒரு எண்ணத்தை எண்ணுகிறான். இது வெறும் எண்ணம்தானே? செய்தால்தானே பாவம். செய்தால்தானே தவறு. அதனால் பிறருக்கு பாதிப்பு வரப்போகிறது. மனதில்தானே எண்ணுகிறோம் என்று அவன் எண்ணுவதாகக் கொள்வோம். அதே எண்ணத்தை பிறர் எண்ணினால் அதை நியாயம் என்று இவன் ஏற்றுக் கொள்வானானால் இவன் அதை தாராளமாக எண்ணலாம

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.