ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 468

கேள்வி: துன்பங்கள் தாங்கும் மனவலிமை பெற மறுபிறப்பு தவிர்க்க வழி முறைகள்:

இறைவனருளால் சதாசர்வகாலம் இறை சிந்தனையும் தர்ம சிந்தனையும் சத்திய சிந்தனையும் கொண்டு உண்மையாக ஒரு மனிதன் வாழ்வது. இப்படியெல்லாம் வாழ்கிறேன் என்று குடும்பத்தை புறக்கணித்துவிட்டு செல்லாமல் இருப்பது. குடும்பத்திற்கு செய்ய வேண்டிய நியாயமான கடமைகளை செய்து கொண்டே இறை வழியில் வருவது. தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வது. வார்த்தைகளால் யாரையும் புண்படுத்தாமல் எல்லோரையும் சந்தோஷப்படுத்துவது. இதுபோன்ற நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு அனுதினமும் வாழ்ந்தால் கட்டாயம் அவனுக்கு மறுபிறவி இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை மறுபிறவி இருக்க வேண்டும் என்று இருந்தாலும் கூட அது இறைவனால் தவிர்க்கப்படலாம். மீறி கொடுக்கப்பட்டாலும் இறை சிந்தனையோடும் தர்ம சிந்தனையோடும் வாழக் கூடிய வாய்ப்பாக அமையும். இப்படியொரு நல்ல சிந்தனையோடு வாழ நன்மை உண்டு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.