ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 529

கேள்வி: மோட்ச தீப வழிபாட்டில் கலந்து கொண்டால் பாவ கர்மங்களின் அளவு குறைக்கப்படுகின்றதா?

இறைவனின் அருளால் ஒரு ஏழை சிறு அளவு தனத்தை கூட செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். அன்றாடம் வாழ்க்கையில் போராட்டத்தையே காண்கிறான். வறுமையின் உச்சத்தில் இருக்கிறான். அவனைப் போன்ற மனிதர்கள் ஆலயம் சென்று வெறும் உடல் ரீதியான தொண்டை செய்துவிட்டு எதை வேண்டினாலும் ஒருவேளை இறைவன் அருளால் கிடைக்கலாம். ஆனால் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மோட்ச தீபத்திலோ வேறு வழிபாடுகளிலோ கலந்து கொண்டு வணங்கி விட்டு வந்தால் மட்டும் பலன் கிட்டாது. அந்த தொண்டிற்கு உண்டான செலவினங்களை தாராளமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னிடம் இருக்கிறது நான் மிகவும் போராடி சேர்த்து வைத்திருக்கிறேன். நான் ஏன் தர வேண்டும்? என் அந்திம (இறுதி) காலத்திற்கு நான் யாரிடம் கையேந்துவது? என்ற சித்தாந்தங்களும் கொள்கைகளும் உள்ளவர்கள் இதுபோன்ற இடங்களுக்கு சென்று மிகவும் சிக்கனமாக சாமர்த்தியமாக நடந்து கொண்டால் ஒரு பலனும் அவர்களுக்கு கிட்டாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.