ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 643

கேள்வி: தியானம் பற்றி:

ஒரு மனிதன் கோயிலிலோ சமாதியிலோ தியானத்திலோ இறைவனை பெரியவர்களை நினைத்து ஆழ்நிலையில் சென்று ஆனந்தப்பட்டு அதிலும் ஒரு உயர் நிலையில் செல்லும் போது உடல் உருகி உள் உருகி பேரானந்தத்தில் பௌதீக உடலின் உணர்வு அழிந்து எங்கு இருக்கிறோம் என்று பிரித்தரியாத நிலையில் அவன் சூட்சும சரீரம் அந்த நேரத்தில் அவன் தியானிக்கும் அந்த இறை மகான் போன்றவர்களின் ஆத்ம நிலையுடன் ஒன்றி பிணைந்து நிற்கும். அந்த நிமிடம் அது உணருகிற நிலை தான் இறைவன். ஏனென்றால் இறை சக்தியுடன் பிணைந்து நிற்கும் நிலையில் அவன் ஆத்மா இறையாக மாறிவிடுகிறது. இது ஒரு வினாடியில் நடந்து விடுகிற நிகழ்ச்சி ஆயினும் என்ன நடந்தது என்பதை அந்த ஒருவனால் பௌதீக உடலால் அறிவால் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. சித்தர்களாகிய எங்களுக்கே ஒருவன் எத்தனை முறை இறை அனுபதியில் ஒன்றி இருந்திருக்கிறான். எத்தனை முறை அந்த ஆத்மா சுத்தமடைந்திருக்கிறது என்பதை பகுத்தறிய முடியும். ஒவ்வொரு முறையும் தியானத்தில் ஆத்மாவும் உடலும் சுத்தம் அடைகிற பொழுது பெரியவர்கள் தொடர்பு மிக எளிதாகும். இதனால் தான் தியான வழியில் செல்வதை நீண்ட தியானத்தை நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.