ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 435

கேள்வி: இறைவன் மேல் அணிவித்த மாலையை பிரசாதமாக ஏற்ற பிறகு நாங்கள் எப்படி பராமரிப்பது?

இறைவனின் கருணையால் யாங்கள் கூறவருவது யாதென்றால் இதுபோல் சுவாமியின் திருமேனியில் உள்ள மாலையை அதுபோல் பிரசாதமாக ஏற்பதும் பய பக்தியாக வழிபாடு செய்வதும் தவறல்ல. என்றாலும் கூட நன்றாக கவனிக்க வேண்டும். தெரிந்தும் தெரியாமலும் அந்த பிரசாத பூக்கள் எங்கும் சிதறாமல் பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்க முடியவில்லை என்றால் அதை அங்கேயே ஸ்தல விருட்சத்தின் அடியில் வைத்து விடலாம். அல்லது அது இறைவனிடமே இருக்கட்டும் ஒரு மலரை மட்டும் கொடுங்கள் என்று பவ்யமாக கேட்டுக் கொள்ளலாம். அதைவிட்டு அதை வாகனத்தில் மாட்டுவது அனாச்சாரமாகும். அதை யாங்கள் ஒருபொழுதும் ஏற்பதில்லை. மலர்கள் அனைத்துமே இறைவனுக்கும் இறைவனுக்கு சமமான மகான்களுக்கு மட்டுமே உரியது. அதை அனாச்சாரமான காரியங்களுக்கு பயன்படுத்துவதை யாங்கள் ஒருபொழுதும் ஏற்பதில்லை. பாவப்பட்ட மனிதனின் மேல் மலர்கள் இருக்கும் பொழுது கண்ணீர் விட்டுக் கதறி இறைவனிடம் கேட்கும். என்ன பாவம் செய்தேன் இறைவா இவன் மேனியில் நான் கிடக்கிறேனே? என்னை மன்னிக்கக் கூடாதா? உன் மேனிக்காக மலர்ந்த எனக்கு இவன் மேனியில் இடம் வந்திருக்கிறதே? இது நியாயமா? என் மீது இரக்கமில்லையா இறைவா? என்று ஒவ்வொரு மலரும் கண்ணீர் விடுகிறது. எனவே மலர்களை கழுத்திலே சூடிக்கொள்ளும் முன்னால் மனிதன் சிந்திக்க வேண்டும். அடுத்த வார்த்தை கேட்பார்கள். பெண்கள் தலையில் சூடுகிறார்களே? என்று. இதிலே பெண்களுக்கு சில விதி விலக்குகளை இறைவன் தந்திருக்கிறார். அதிக அளவு இல்லாமல் சிறிய அளவிலே நறுமணமிக்க மலர் மாலையை மலர் சரத்தை பெண்கள் சூடிக் கொள்ளலாம். அதற்கு காரண காரியங்கள் வேறு. அதை நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.