ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 354

கேள்வி: யாகத்தில் அன்னை காட்சி தரவேண்டும்?

பிரகலாதனின் பக்தி வந்து விட்டால் இராவணனின் பக்தி வந்து விட்டால் (இதுபோல் அத்தனை அசுரர்களின் கதையை எடுத்துப் பார்) அந்த பக்தி வந்து விட்டால் நாயன்மார்களின் ஆழ்வார்களின் மன உறுதி மனத்தெளிவு வந்து விட்டால் சித்தர்களின் பற்றற்ற தன்மை வந்து விட்டால் கட்டாயம் இறை காட்சி கிடைக்கும். பல்வேறு வேலைகளில் இறைவனை வணங்குவது ஒரு வேலை என்றிருப்பது மனிதனின் இயல்பு. உலகியலுக்கு முக்கியத்துவம் தரும்வரை இறை இரண்டாம் பட்சமாகத்தான் மனிதனுக்கு இருக்கிறது. அடுத்து இந்த உலகியல் வாழ்வை நன்றாக வாழ வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என்பதற்காக இறையை நோக்கி செல்லும்வரை இறை அதை வேண்டுமானாலும் தரலாம். இறை வேண்டும் என்று இது வரை யாரும் வேண்டவில்லை. அதுபோல் தின்மையும் உறுதியும் வரும் பொழுது கட்டாயம் இறை காட்சி கிட்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.