ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 596

கேள்வி: விதியை மதியால் வெல்ல முடியுமா?

விதியை மதியால் ஆய்வு செய்யலாம். ஆட்சி செய்ய இயலாது. அது போல் விதி மதி என்பதையெல்லாம் தாண்டி பிரார்த்தனை என்ற எல்லைக்கு வந்து விடு. அது உன்னை கால காலம் காத்து நிற்கும். சென்றது செல்ல இருப்பது என்றெல்லாம் பாராமல் உள்ளுக்குள் பார்த்து பழகு. பழக பழக விதி உனக்கு சாதகமாக மாறும். பக்குவம் பெறுவதற்குத் தான் அனுபவங்கள். அந்த அனுபவங்கள் தான் மனோ பலத்தை அதிகரிக்கும் வழியாகும். மனோபலம் இல்லாது தெய்வ பலம் கூடாது. மனோ பலத்தை உறுதி செய்யவும் வளர்த்துக் கொள்ளவும் துன்பங்களை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். அதுபோலத்தான் பல்வேறு சோதனைகளும் வேதனைகளும் மனிதனை விரட்டுகின்றன. இவற்றைக் கண்டு மனம் தளராது எதிர்த்து இறை அருளோடு போராடினால் இறுதியில் நலமே நடக்கும். உனது வாழ்விலும் கடை வரையிலும் நலமே சேரும். இது போல் இயன்ற பிரார்த்தனைகளை தர்மங்களை செய்து கொண்டு எமது வழியில் தொடர்வதை தொடர்க. யாவும் நலமே நடக்கும். பூரண நல்லாசிகள்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.