ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 590

கேள்வி: குருநாதர் பல கேள்விகளுக்கு மௌனமாக இருக்கிறார்?

இறைவன் அருளால் ஸ்ரீ ராமபிரானுக்கு அபிஷேகம் நடந்தது. யாராவது வந்தார்களா? ஏதாவது அங்கு அதிசயம் நடந்ததா? இது குறித்து குருநாதர் ஏதும் கூறவில்லையே? இதுகுறித்து ஏதாவது கூறினால் நன்றாக இருக்குமே. ஆஞ்சநேயர் வந்தாரா? கருடாழ்வார் வந்தாரா? சிறிய திருவடியா? பெரிய திருவடியா? அல்லது ராம பிரானே வந்து அந்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டாரா? இவையெல்லாம் நியாயமான வினாக்களாக இருந்தாலும் இது போன்ற வினாக்களுக்கு அதிலும் இத்தருணம் யாங்கள் ஏதும் கூற விரும்பவில்லை. இனி அவரவர்களே இதுபோன்ற இறைவழிபாட்டில் புரிந்து கொள்ளும் வண்ணம் நிகழ்ச்சி நடக்கும் வண்ணம் அவரவர்களும் தன் மனதை லயப்படுத்தி பூஜை செய்தால் பலன் உண்டு. அந்த பலனை அங்கேயே உணரக்கூடிய ஒரு தன்மைக்கு அனைவரும் ஆட்பட வேண்டும் என்று நாங்கள் மௌனம் காக்கிறோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.